27/03/2026
இலங்கை ஜனாதிபதிகளில் அநுர ரோயல் குடும்பத்தை சார்ந்த
40 வருடங்கள் அரசியல் அனுபவம் பெற்ற ஒருவர் அல்ல.
அநுர அரசுக்கு சர்வதேச தொடர்புகள் எதுவும் கிடையாது. கேபினடில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை.
முஸ்லிம் எம்.பி. க்கள் இல்லாமல் அதுவும் ஹிஸ்புல்லா இல்லாமல் மத்திய கிழக்கில் இருந்து எரிபொருள் கொண்டு வர முடியாது.
அநுரவுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதெல்லாம் இங்கு சிலருக்கு உயிர் போகும் அளவுக்கு பிரச்சினையாக இருந்தது.
ஆனால் அநுரவோ,
ரணிலை போல ஆங்கிலம் தெரியும் என்று கோட்டையும் சூட்டையும் மாற்றிக் கொண்டு மஹ்தி ஹஸனிடம் போய் மூக்குடையவும் இல்லை. ராஜபக்ஷக்கள் போன்று திறைசேறி நிதியை எடுத்து அவர்களது பெற்றோர்களுக்கு சிலை செய்தது போன்று தனது பெற்றோருக்கு சிலை செய்து பணத்தை வீணடிக்கவும் இல்லை.
இப்போது உள்ள நெருகடியை அறிந்து ஜனாதிபதி அநுர ரஷ்யாவுடன் கலந்துரையாடி
நாட்டுக்கு எரிபொருள் கிடைக்க ஒரு வழியை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்த நேரத்தில் உலகின் பல நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையால் லாக்டவுன் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தானில் எல்லாம் கிலோமீட்டர் கணக்கில் நீளமான எரிபொருள் வரிசைகளும் மக்கள் அந்த வரிசையில் அடித்துக் கொள்கிறார்கள்.
ஆனால் இலங்கையிலோ பெரிய அளவில் எரிபொருள் வரிசைகள் இல்லை.
இருப்பினும் மே மாதம் வரை போர் நிலைமை தொடர்ந்தால் நிச்சயமாக எமது நாடும் எரிபொருள் தட்டுபாட்டை எதிர்நோக்கும்.
அதனால் ஜனாதிபதி அநுர முன்கூட்டியே சரியான முடிவை எடுத்து இப்போது ரஷ்யாவிலிருந்து நாட்டுக்கு எரிபொருள் கிடைக்க இருக்கிறது.
எது எப்படியோ இந்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி மக்களின் பெரும் ஆதரவை எவ்வாறு தக்கவைக்க வேண்டும் என்று எல்லோரையும் விட ஜனாதிபதி அநுரவுக்கு நன்கு தெரியும்.